தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிகரித்துள்ளது?

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை நேரத்திலேயே வெயில் கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே செல்லத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் சற்றே குறைந்திருந்தாலும், தற்போது மீண்டும் கடும் வெயில் நிலவத் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் உடல்நலன் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய வெப்பநிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஆண்டும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு ஆலோசனை நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், வெயிலின் தாக்கத்தை ஆய்வு செய்து பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை இறுதி முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்போது அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button