இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான பஞ்ச் மின்சார எடிஷனுக்கு போட்டியாக, ஹுண்டாய் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்த உள்ளது.
டாடா பஞ்ச் மின்சார கார் மாடலின் விலை வரம்பானது ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி 14.44 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. இதற்கு போட்டியாக மிகவும் போட்டித்தன்மையுடன் ஹுண்டாயின் புதிய மின்சார காரின் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம், மிகவும் அணுகக் கூடிய விலைப்பட்டியலை வடிவமைப்பாது எளிதாகி உள்ளது. அதன்படி, தொடக்க விலையானது 9 முதல் 10 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படலாம்.