கிட்டத்தட்ட 1,800 எதிர்கால பீரங்கிகள், மலைப் போருக்காக 400 இலகு ரகப் பீரங்கிகள், 50,000 பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட ரோபோ எதிர்-IED அமைப்புகளையும் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன.
உலகில் நான்காவது பெரிய ராணுவமாக விளங்கும் இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போரைத் தீவிரமாக்க இந்தியா தயாராக உள்ளது என்பதையும், எந்தவொரு அவசரநிலைக்கும் தன்னை பலப்படுத்திக் கொள்கிறது என்றும் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.