“செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விசிக பலமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்துவரும் நிர்வாகிகளுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளைக் கொடுத்தால் ஏற்கெனவே போட்டியிட்டவர்களுக்கே சரியாய் போய்விடும். அதனால் குறைந்தது 12 தொகுதிகளையாவது இம்முறை கேட்கவேண்டும்” என இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வலியுறுத்துவதால் அவர்களை சமாதானப்படுத்த வழி தெரியாமல் திருமாவளவன் தவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.