இந்த வரி குறைப்பால் இந்தியாவின் ஜவுளி, கடல் உணவு, ஆட்டோமொபைல் மற்றும் ரசாயனத் துறைகள் பெருமளவில் பயனடையும் என்று கூறப் படுகிறது
குறிப்பாக லாப வரம்புகள் பெரும்பாலும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்கும். அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் ஜவுளி, ஆயுத்த ஆடை மற்றும் காலணிகள் போன்ற துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் நன்மை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் அத்துறைகளில் இந்தியாவுக்குப் போட்டியாக உள்ள பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கணிக்கப் படுகிறது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, நியூசிலாந்து,ஓமன்,பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, இந்த ஆண்டு,77வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய கையோடு ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக உடன்பாட்டை எட்டியது குறிப்பிடத் தக்கது.